வெள்ளி, 12 அக்டோபர், 2012


அன்பான காலை வணக்கம் நண்பர்களே
ஏசு அல்லா ஹர ஹர ஓம் - ராதே- க்ருஷ்ண கணேசா ஜெயெ ஜெய ஓம்
ஒரு குட்டி பிராத்தனை
********************
[ றோம் – எல்லாம்,எல்லோரும்]
நண்பர்கள் இந்த உலகம்,உலகில் உள்ள அத்தனை ஜீவராசிகள் ,இறைவன்எல்லாவற்றிற்கும் சேர்ந்து ஒரு குட்டி பிராத்தனை

ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!

ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!

ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!

 அசைபோட 5 விஷயங்கள்
 ***********************
1.சிரிக்கலாம் வாங்க
*********************

பிச்சைக்காரன் 1: அதோ உண்டியல் குலுக்கிக்கிட்டுப் போறாரே கட்சித்தலைவர். அவரும் நம்மளப் போலத்தான். பிச்சைக்காரன் 2: எப்படி சொல்றே... பிச்சைக்காரன் 1: அவருக்கு வசதி இருந்தும் பிச்சை எடுக்கிறாரு, நாம வசதியில்லாம பிச்சை எடுக்கிறோம்.
**
"டாக்டரும், பேஷன்ட்டும் ஒருத்தரை ஒருத்தர் கட்டிப் பிடிச்சுக்கிட்டு அழுகுறாங்களே ஏன்?" "ரெண்டு பேருக்கும் இதுதான் முதல் ஆபரேஷனாம்!"
**
"வாழ்க்கையில சில விஷயங்கள் நடக்காமல் இருந்தால் நல்லா இருக்கும்!" "நாம காதலிச்சதைச் சொல்றேளா?" இல்லே! நம்ம கலியாணம் நடக்கப் போறதைச் சொல்றேன்!"
*****************************************************************************
2.அழகே நலமா?
வாழப்பழம்,எலுமிச்சை சாறு கொஞ்சமா எடுத்துசேர்த்து தினமும் முகத்தில் ஃபேசியல் செய்து வந்தால் முகம்மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாறும்.தேவையில்ல அழுக்கு தோல் வியாதிகல்,கரும்புல்லிகள் அகலும்
 ********************************************************************************
3.அன்பே நலமா?
இஞ்சி சாறோட தேன் கலந்து குடிங்க 10 நிமிஷத்துல தலைவலி நிக்குறதோட ரத்த அழுத்தம் சரியாயிரும். தினமும் கொஞ்சம் அதிகமாக நீர் விட்டு பருகுங்கள் வயிற்றுப்புண் உல்ளவர்கள்
 ****************************************************************************
 4.ஆன்மீ கம்
1.ஏசு அல்லா ஹர ஹர ஓம் - ராதே- க்ருஷ்ண கணேசா ஜெயெ ஜெய ஓம் இந்த மந்திரத்தை பிள்லைகளுக்கு நாம சங்கிர்த்தனத்துக்கு சொல்லி கொடுங்கள்,இளம் வயதிலேயே மத ச்சர்பின்மை மனதில் வலரும் இதுவும் ஒரு மஹா மந்திரமே,இதை ஜெபிப்பது பாவங்களையும் தோஷங்களையும் போக்கும்,வெற்றி தரும்.
2.கடன் நீங்க அங்காரக ஸ்தோத்திரம்
அங்காரக மஹீபுத்ர பகவன் பக்தவத்ஸலநமஸ்தேஸ்து மமாசேக்ஷம் ருணமாசு விமோசய
(ஓ அங்காரக! சீக்கிரத்தில் என்னுடைய எல்லா கடன்களையும் போக்க வேண்டும் என்பது இதன் பொருள்.)
  3.**விளம்பரப்படுத்த வேண்டாம்
பக்தியை
விளம்பரப்படுத்தினால்
அது
உண்மையாகவே பிறரையும்
பக்திசெய்ய தூண்டும்
நல்ல நோக்கமுடயதாக
இருக்கட்டும்
**இதயம்
ஒரு குழந்தை
அதனை அன்பெனும்
 போஷாக்கால் செழிக்க செய்வோம்
***********************************
நண்பேண்டா
***********************************
*அன்பெனும்
தேன் தடவி வைத்திருக்கிறேன்
என்
இதயத்தில்
நண்பர்களின் வருகையை எதிர் பார்த்து!
*
கிருஸ்ணன் – குசேலன்
 சீத்தலை சாத்தனார் – பிசிராந்தையார்
 கர்ணன் – துரியோதனன்
 ஓம் - ?
 என்ன்னோடு – அந்த இடத்தை
 நிரப்ப யார்
 இருக்கிறீர்கள்?
*
*நண்பர்கள்
இதயமும் தேவைப்படுகிறது
என் அன்பு
அளவுகடந்தது
அதை அடைத்து வைக்க
ஒரு இதயம் போதாது
என்பதால்!
*நண்பர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் தவறை விட்டுக்கொடுக்கலாமே ஒழிய ஒரு போதும் நட்பை விட்டுக்கொடுக்க கூடாது.
**
** நம் நண்பர்கள்தான்
நம் சொத்துக்கள்
விலை மதிக்க முடியாத சொத்துக்கள்,அவர்களின் அன்பை விட உயர்ந்த சொத்துக்கள் எது?**

***********************************************
நலாட்சி மலரவைப்போம்
***************************
நான் அறிஞர் அண்ணாவோ ,அம்பேத்காரோ அல்ல என் வார்த்தையை மற்றவர் செவி மடுப்பதற்கு
உங்களைத்தவிர யார் கேட்பார்கள் நண்பர்களே என் வார்த்தையை - அரசு ஒழுங்காக அமைந்தால்தான் நாடும் மக்களும் ஒழுங்காகும்,நீங்கள் உங்கள் குடும்பமும் நல்லவர்களை ஆட்சியில் அமர்த்துங்கள்

மனித எண்ணங்கள் நிறைந்ததுதான் இந்த சமுதாயம் ஆகவே எண்ணுங்கள் நல்லவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்று,நண்பர்களே இனி நமது நல் எண்ணம் இந்த உலகை மாற்றட்டும்.
உண்மையான அன்புள்ளவர்கள் மதம்,இனம்,மொழி,நாடு,கட்சி களை கடந்தவர்கள்.இவர்களால்தான்இப்பிரபஞ்சம் இன்னும் உயிரோடிருக்கின்றது.

 மக்களுக்காக 2 வழிகளில் போராடலாம்.
ஒன்று அஹிம்சை வழியில்[ உண்ணாவிரதம் போன்று]
இரண்டு ஆயுதம் ஏந்துதல் இரண்டுமே இக்காலத்தில் வீணாகத்தான் போகின்றன.
மூன்றாவது வழியில் போராடலாம் அதுதான் நண்பர்களே நமது ஓட்டு.
தீயவர்களுக்கு போடும் ஓட்டு நமக்கு நாமே வைத்துகொள்கின்ற வேட்டு.

 எந்த கட்சியையும் சாராமல் நியாயத்தின் கட்சி சார்ந்து ஓட்டு போட்டு மக்களின் நல் வாழ்விற்கு உதவிசெய்யுங்கள்.

 எல்லோரும் எல்லா உயிர்களும் வாழ்க நலமுடன் பலமுடன் வளமுடன் என இறைவனை பிரார்த்திக்கிறேன்.

**********************************************
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

அன்பெனும் ஆலமராமாய் நாம் வளர்ந்து அதன் நிழலில் எல்லா ஜீவராசிகளையும் இளைப்பாற செய்வோம்.

 அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்!
-அன்புடன் ஓம் 8056156496

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக